Monday, October 31, 2011

புத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் சிறிதரன், க.சுப்பு அவர்களின் அஞ்சலி கூட்டத்தில் உரையாற்றினார்!

Monday, October 31, 2011
க.சுப்பு அவர்களின் இறுதிக்கிரியை இன்று(30.10.11) மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் நடைபெற்றது. லாயிட்ஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்ட மரண ஊர்வலமானது. மயிலாப்பூரில் உள்ள மயானத்தை வந்தடைந்தது. அங்கு அவரது உடல் எரியூட்டப்பட்டது.
தகன கிரியைக்குப் பின்னர், அஞ்சலி; கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா,தி.மு.க முக்கியஸ்தர்கள்,நக்கீரன் காமராஜ் ஐக்கிய பொது உடமைக் கட்சியைச் சேர்ந்த தோழர்சங்கர், ஊடகவியலாளர் ரி.எஸ்.மணி தோழர்பத்மநாபாவின் ஆத்மாத்த நன்பர்களும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் அனுதாபிகளுமான தோழர்கள் பாஸ்கர்,தோழர்பாவல்,தோழர்குலைகாதன் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர்சிறிதரன், தோழர்ஸ்ரனிஸ் மற்றும் கு.சுப்பு அவர்களின் நன்பர்,அனுதாபிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அஞ்சலி கூட்டத்தில் பேசிய சிறிதரன், “சுப்பு அவர்கள் எமது கட்சியுடன் இறுதிவரை உறவினை வைத்திருந்ததுடன்,அவரை சந்திக்கும் போதேல்லாம் எம்மை இம்முகத்துடன் வரவேற்று, உபசரிப்பார். அவரது இழப்பால் தவிக்கும் குடும்பத்தாரின் சோகத்தில் நாமும் பங்கு கொள்கிறோம”; என் கூறினார். திருச்சி சிவா பேசும் போது “இங்கு இந்த சடங்கிற்கு வந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மனிதர்களுக்கான உறவுகளின் விரிசல் ஏற்பட்டதை இது காட்டுகிறது. சுப்பு அவர்களின் பேச்சால் நான் கவரபட்டவன்,அவரை நான் சந்திக்கும் போதெல்லாம் என்னை அவர் சிறியவனாக நினைக்காமல், எனக்கு மிகவும் மரியாதை கொடுப்பார். அவர் பலருக்கு உதவிகள் செய்துள்ளார். அவரது குடும்பத்துக்கு நாம் உதவவேண்டும்” என கூறினார்.

இரண்டு நமிட மௌன அஞ்சிலியுடன் அஞ்சலிக் கூட்டம் நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment