Monday, October 31, 2011

இந்திரா காந்தியின் 27 ஆவது நினைவு தினம்!

Monday, October 31, 2011
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 27 ஆவது நினைவு தினத்தினை நாடாளாவிய ரீதியில் மக்கள் அனுஷ்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திராகாந்தியின் சமாதிக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டேல் இன்று காலை மலர் அஞ்சலி செலுத்தியதாக இந்திய தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

பிரதமர் மன்மோகன் சிங், பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார், ஆளும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அத்துடன் டெல்லி ஆளுநர், மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ்சின் சிரேஷ்ட தலைவர்களும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி தனது பாதுகாவலர் ஒருவரால் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment