Monday, October 31, 2011

போலி நாணயத் தாள்களுடன் நபர் கைது

Monday, October 31, 2011
ஒரு தொகை போலி நாணயத் தாள்களுடன் இளைஞர் ஒருவர் மாத்தளை நகரில் வைத்து பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்த மூன்று இலட்ச ரூபா பெறுமதியான நாணயத் தாள்கள் போலியானவையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபர் புத்தளம் உடப்பு பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.



போலி அனுமதிப் பத்திரங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

மணல் ஏற்றிச் செல்வதற்கென போலி அனுமதிப் பத்திரங்களை அச்சிட்ட சந்தேகநபர் ஒருவர் மஹியங்கனையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட செயலாளரின் கையொப்பத்தை போலியாக இட்டு அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்தப் போலி அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மணல் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பதுளை கந்தேகெட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனக் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment