Saturday, October 15, 2011இருநாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியிலான உறவுகளை பலப்படுத்த சீனா இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை வந்துள்ள சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூத்த உறுப்பினர்கள் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினந்த் ஜெனரல் ஜகத் ஜயசூரியாவை சந்தித்து உரையாடிய போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் க்யான் லிஹூ வெளிவிவகார பிரதான் அலுவலகம் தேசிய பாதுகாப்பு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 100 இலங்கை படையினருக்கு கண்ணி வெடி அகற்றுப் பயன்படும் கவசங்களை வழங்க சீனா முன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment