Monday, October 31, 2011

டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து!

Monday, October 31, 2011
சென்னை: டைரக்டர் பி.வாசுவின் மகன் ஷக்தி. இவர் “தொட்டால் பூ மலரும்” என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆட்டநாயகன் படத்திலும் நடித்துள்ளார்.

ஷக்திக்கும், சென்னையை சேர்ந்த முரளி-துஷிதா தம்பதி மகள் ஸ்மிருதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஷக்தி-ஸ்மிருதி திருமணம் இன்று காலை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடந்தது.

மணமக்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் வாழ்த்தினார். நடிகர்கள் பிரபு, ராதாரவி, சத்யராஜ், பரத், நரேன், கன்னட நடிகர் உபேந்திரா, நடிகை குஷ்பு, கவிஞர் வாலி, நா.முத்துக்குமார், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, ரோஜா, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், சந்தானபாரதி, பி.வி.ராஜேந்திரன், ஆகியோரும் வாழ்த்தினார்கள்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.

No comments:

Post a Comment