Monday, October 31, 2011

மட்டு. சிவானந்தாவில் சாதனைபடைத்த மாணவர்கள் கௌரவிப்பு!

Monday, October 31, 2011
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் இவ்வாண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இன்று காலை பாடசாலையின் நடராஜாநந்தா மண்டபத்தில் அதிபர் கே.ரவீந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு விழாவை சிவானந்தா பாடசாலையின் 1994ஆம் ஆண்டு உயிரியல் விஞ்ஞானப்பிரிவு மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்தனர்.

கல்லடி விவேகானந்தா வித்தியாலய அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்போது கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான் சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment