Sunday, October 30, 2011

வவுனியா - தாழ்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது வெடிபொருட்கள் மீட்பு!

Sunday, October 30, 2011
வவுனியா - தாழ்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சோதனை வவுனியா விசேட அதிரடிப்படையினரால் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 6 கைக்குண்டுகள், ஐகோம் தொடர்பாடல் சாதனங்கள் இரண்டு மற்றும் அதற்குரிய என்டனா என்பவை மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment