Monday, October 31, 2011

பாரிசில் புலிகளின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கியஸ்த்தர் பருதி மீது கத்திக் குத்து!

Monday, October 31, 2011
புலிகளின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) முக்கியஸ்த்தரான பரிதி பிரான்சில் இனந்தெரியாத நபர்களினால் கத்திக் குத்துக்கு உள்ளாகியுள்ளார். நேற்றைய தினம் (ஞாயிறு) இரவு இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் வேளை அங்கே காத்திருந்த சிலர் இவரை கத்தியால் வெட்டியும் குத்தியும் உள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அண்மையில் புலிகளின் இரு தரப்பினரிடையே உருவாகியிருக்கும் முரண்பாடுகளின் உச்சக்கட்டமாகவே இக் கொலை முயற்சி இடம்பெற்றுள்ளதாகக்; கூறப்படுகிறது. புலம்பெயர் நாடுகளில் புலிகளின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்னும் கடந்த பல வருடங்களாக இயங்கிவருகின்றது. அதில் பணி புரியும் தமிழ் செயற்பாட்டாளர்கள் பலர் கடந்த சில மாதங்களாகத் தாக்கப்பட்டு வருகின்றனர். பிரித்தானியாவின்; செயல்பாட்டாளர்களில் ஒருவரான தனம் சில மாதங்களுக்கு முன்னர் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment