Monday, October 31, 2011

கூட்டமைப்புக்கும் ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீமூனுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி நாளை நியூயோர்க்கில் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன!

Monday, October 31, 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூனுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி நாளை முதலாம் திகதி நியூயோர்க்கில் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை அரசாங்கம் இந்தச் சந்திப்புக்கு தனது அதிர்ப்த்தியை தெரிவித்தபோதும் திட்டமிட்ட சந்திப்பை இரத்துச் செய்ய முடியாது என்று பான் கீமூன் இலங்கை அரச பிரதிநிதிகளிடம் தெரி வித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கனடாவில் தங்கியுள்ள கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பான் கீமூனைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்புக்கள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கோ ஐ.நாவின் இலங்கைக்கான தூதுவர் பாலித கொஹன்னவுக்கோ இந்தச் சந்திப்புத் தொடர்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பான் கீ மூன் சந்திப்பதற்கு ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹன்ன எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்த இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர் அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் இது தொடர்பான நிலைப்பாட்டை முன்கூட்டியே தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் அல்லர் என்றும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் அங்கிருப்பதாகவும் அவர் பான் கீமூனுக்கு எடுத்துக் கூறி இதன் காரணமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பான் கீமூன் சந்திக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி இருந்தார்.

இதேவேளை, நியூயோர்க்கில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளை (நவநீதம்பிள்ளை) உட்பட ஐ.நா. உயரதிகாரிகள் பலரையும் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் சந்தித்துத் தமிழ்மக்களின் தற்போதைய நிலை தொடர்பில் விரிவாக விளக்குவர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment