Monday, October 10, 2011

முல்லேரியா துப்பாக்கிச் சூடு - நான்காவது நபரும் உயிரிழப்பு!

Monday, October 10, 2011
முல்லேரியாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.

அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் நேற்றிரவு உயிரிழந்ததாக தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ஆரியவங்ச குறிப்பிட்டார்.

இதன் பிரகாரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உட்பட நால்வர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment