Sunday, October 9, 2011

கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்தில் இராணுவ வீரரின் சடலம்!

Sunday, October 09, 2011
கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்தில் இராணுவ வீரர் ஒருவர் நேற்று முன்தினம் துப்பாக்கிக் துப்பாக்கி ரவைகள் துளைத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நுவரெலியாவைச் சேர்ந்த குமார (வயது 22) என்பவரே மரணமானவர். இவர் இராணுவத்தின் 66 ஆவது பிரிவின் 18 ஆவது கஜபாகு றெஜிமன்ட் பிரிவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து வரப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்

No comments:

Post a Comment