Monday, October 10, 2011

முல்லேரியா துப்பாக்கிசூட்டு சம்பவம் குறித்து விசாரணைகள்!

Monday, October 10, 2011
முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் குறித்து காவல்துறை விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட மூவர் பலியாகினர்

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்தசில்வா உள்ளிட்ட 10 பேர் வரை பலத்த காயமடைந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவிசாரணை பிரிவினர் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக உயர் காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment