Monday, October 10, 2011

இந்திய வெளியுறவுச் செயலாளர், பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு!

Monday, October 10, 2011
இந்திய வெளியுறவுச் செயலாளர் திரு. ரஞ்சன் மத்தை, பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷவை இன்று காலை(ஒக்-10) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இச்சந்திப்பில் இரு தரப்புறவு குறித்தும், விசேடமாக பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கைக்கான முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந் சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே கான்தாவும் கலந்துக் கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment