Sunday, October 30, 2011

வீசாவுக்கான நிர்வாகக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது!

Sunday, October 30, 2011
வெளிநாடுகளுக்கான வீசா பெற்றுக்கொள்வதற்கு இலங்கையில் அறவிடப்படும் நிர்வாக கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது குறித்து இந்தியாவில் இருந்து வேண்டுகோள் முன்வைக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

குறிப்பாக தெற்காசிய நாடுகளுக்கான வீசா நிர்வாகக் கட்டணங்களை குறைத்து சலுகையென்றை வழங்குமாறு வேண்டுகோள்ள முன்வைக்கப்பட்டதாக கூறினார்.

எனவே அது தொடர்பிலான பிரேரணை ஒன்று நிதியமைச்சுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சுட்டிக்காட்டினார்.

தெற்காசிய வலய நாடுகளுக்கு மாத்திரமன்றி ஏனைய அனைத்து நாடுகளுக்கும் வீசா அனுமதிக்கான நிர்வாக கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

தற்போது வீசா அனுமதிக்காக இலங்கையில் 50 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment