Friday, October 14, 2011அமெரிக்க பங்கு சந்தையில் மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்ட இலங்கையரான ராஜ் ராஜரட்ணத்துக்கு, 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவருக்கு 10 மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது சொத்துக்களில் இருந்து 50 மில்லியன் டொலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க வர்த்தக நடவடிக்கையில், ராஜ்ராஜரட்ணத்தின் மோசடி வைரஸ் ஒன்றைப் போல் பிரதிபளித்துள்ளதாகவும், அதனை நீக்க வேண்டியது அவசியம் எனவும், நிவ்யோர்க் நீதிபதி ரிச்சட் ஹொல்வெல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ராஜரட்ணத்துக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் நீரழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் அவரது நிதி உதவிகளால், இலங்கை மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில், பல பொது மக்கள் நன்மை பெற்றுள்ளனர்.
இவற்றைக் கருத்தில் கொண்டு, அவருக்கான சிறை தண்டனை 11 ஆண்டுகளாக வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment