Tuesday, September 13, 2011

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்!

Tuesday, September 13, 2011
இலங்கை சென்றடைந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபர்ட் ஓ பிளெக், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ரொபர்ட் ஓ பிளெக் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று காலை கொழும்பு சென்றடைந்தமைக் குறிப்பிடத்தக்கது.

இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் குறித்த விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஒ பிளக், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியளவில் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் என ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் முன்கூட்டிய தீர்ப்புக்களை வழங்காது, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதன் குறைநிறைகள் பற்றி சர்வதேச சமூகம் விமர்சிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

வடக்கில் இராணுவ மயமாக்கல் இடம்பெறுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களைப் போன்றே வடக்கிலும் இராணுவ முகாம்கள் காணப்படுவதாகவும், அவை பாதுகாப்பு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளன எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டு;ள்ளார்.

ரொபர்ட் பிளக் இன்று(13.9.2011)யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.

சிவில் அமைப்பு பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித வீரதுங்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகும் என இலங்கைப் பிரதிநிதிகள், ரொபர்ட் ஓ பிளக்கிடம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment