Wednesday, September 21, 2011

TNAன் தலைவர் இரா.சம்பந்தன் ஓர் தேசத்துரோகி - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார!

Wednesday, September 21, 2011
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஓர் தேசத்துரோகி என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார கடுமையாக சாடியுள்ளார்.

சம்பந்தன் இறக்கும் முன் தமது கனவினை நனவாக்கிகொள்ள முயற்சிப்பதாகவும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்;ப்பதற்காக அவர்களின் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்குரிய அதிகாரத்தை அந்தந்த பிரேதசபைகளுக்கு வழங்குவதும், அவர்களக்கான மொழி உரிமையினை வழங்குவதுமாகும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இன்றைய செய்தியாளர் மாநாட்டின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டதாவது :-

தமிழ் மக்கக்கான வீடுகள் திருத்திக் கொடுக்கப்படவேண்டும். அவர்களின் பிரதேசத்தைக் அபிவிருத்திச் செய்வதற்கான அதிகாரங்களை குறித்த பிரதேச சபைகளுக்கு வழங்கவேண்டும். அங்கு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். அவர்களுக்கான மொழி உரிமையை வழங்கவேண்டும். ஆனால் சம்பந்தன் குறிப்பிடுவது அதுவல்ல. அவர் இறக்கும் முன் தனது கனவை நனவாக்கிக்கொள்ள முயற்சிக்கின்றார்.

சம்பந்தன் என்பவர் ஓர் தேசத்துரோகியாவார். ஐக்கிய நாடுகள் சபையினால் இம்முறை இலங்கை மீது இடைக்கால பிரேரணை முன்வைக்கப்படும்போது இலங்கை அரசாங்கம் அதனை விமர்சித்திருந்தது. ஆனால் சம்பந்தன் அதனை வரவேற்று அதனை சரியென ஒத்துக்கொண்டார். அத்துடன் இந்த நாட்டின் மண்ணை மித்து இங்குள்ள காற்றினைச் சுவாசித்துக்கொண்டே அவர் கடடிமொன்றையும் எழுதியுள்ளார். எனவே இவர் தேசத்துரோகியே. என்றும் சாடினார்.

No comments:

Post a Comment