Wednesday, September 21, 2011

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை OECD நிராகரித்துள்ளது!

Wednesday, September 21, 2011
இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான உலக அமைப்பு( OECD ) நிராகரித்துள்ளது.

பொருளாதார தரப்படுத்தலில் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தக் கோரிக்கையை குறித்த அமைப்பு நிராகரித்துள்ளது.

உலகப் பொருளாதாரம் தொடர்பான தரப்படுத்தல்களை மேற்கொள்ளும் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக ஓ.ஈ.சீ.டி கருதப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார நிலைமை அபிவிருத்தி அடைந்துள்ளதாகவும் இந்த விடயங்களை கருத்திற் கொண்டு தரப்படுத்தல்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓ.ஈ.சீ.டியின் இந்த நடவடிக்கை அதிருப்தி ஏற்படுத்துவதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் ஏனைய முதனிலை தரப்படுத்தல் முகவர் நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் சாதகமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் சார்பான சகல விடயங்களையும் கருத்திற் கொண்டு தரப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக ஓ.ஈ.சீ.டி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment