Monday,September,05,2011
23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டு அதில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களும் கடந்த வாரம் வழங் கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் இந்தத் தேர்த லில் தமிழ் பேசும் மக்களாகிய தமிழர்களும், முஸ்லிம்களும் தமது நிலைப்பாட்டினை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பது பற்றியே ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் இவ் விடயத்தில் ஆழமாக ஆராய்வதற்கு ஒன்றுமில்லை. வழமை போலவே இத்தேர்தலிலும் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெறப் போவது நிச்சயம்.
தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் கொழும்பு உட்பட தேர்தல் நடைபெறும் இடங்க ளில் தமிழ்க் கட்சிகள் சில போட்டியிட்டாலும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்பேசும் வேட்பாளர்களையே அவர்கள் ஆதரிப்பர். கொழும்பு மாநகர சபையை யார் கைப்பற்றுவது என்பது குறித்தே பலரதும் கவனம் இப்போது சென்றுள்ளது. இதுவரை காலமும் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக இருந்துவந்த இம்மாநகர சபை இம் முறை ஆளுங்கட்சியிடம் வீழ்ச்சியடைவது உறுதி என்றாகிவிட்டது. இதற்கு ஆளும் ஐக் கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தெரிவாக இடம் பிடித்துள்ள வேட்பாளர்கள் சாட்சி யாக அமைந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட தலைமையிலான அணியில் முன்னாள் மாநகர மேயர் அமரர். க. கணேசலிங்கத்தின் துணைவியார் திருமதி. யமுனா கணேசலிங்கம், முன் னாள் பிரதி மேயர் அசாத் சாலி உட்படப் பல முக்கிய பிரமுகர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் இத்தேர்தலை ஒரு அரசியல் கண்ணோட்டத்தில் பார்வையிடாது மக்களுக்குச் சேவை செய்யும் ஒன்றாக நோக்குகின்றனர்.
கொழும்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநா யக மக்கள் முன்னணி போட்டியிட்டாலும் அவர்களுக்கு முன்னர் போன்று தமிழ் மக்களி டையே இப்போது செல்வாக்குக் கிடையாது. இதற்குக் காரணம் அவர்கள் தமிழ் மக்களி டையே தொடர்ந்தும் கூறிவரும் பொய்களே ஆகும். அத்துடன் அக்கட்சிக்குள் வெடித்து ள்ள உட்கட்சிப் பூசல் நிலையும் இன்னொரு பக்கக் காரணமாக உள்ளது. இதனைவிடவும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் அண்மை யில் கட்சியினுள் உள்வாங்கப்பட்டுள்ள காரணத்தினால் அவர்களால் எதிர்பார்த்துள்ள தைப் போன்று ஒருசில ஆசனங்களைப் பெறுவதே கடினமாக இருக்கும்.
இன்று அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால்தான் தமது பிரதேச அபிவிருத்தி மற்றும் தொழில்வாய்ப்புக்கள், தேவைகள் என்பவற்றை இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். கடந்த காலங்கள் போன்று முரண்டு பிடிக்கும் அல்லது எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழ் கட்சிகளின் அரசிய லைத் தமிழ் மக்கள் இப்போது ஏற்றுக் கொள்வதில்லை. ஜனாதிபதி, பாராளுமன்றம், மாகாண சபைகள், எனச் சகல அதிகாரங்களும் ஆளுங்கட்சி வசம் இருக்கும் போது இந்த உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை வைத்துக் கொண்டு எதனையும் பெரிதாகச் சாதித்து விட முடியாது என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டு மக்களுக் குமே நன்கு தெரியும்.
இதனால் மக்களை முன்னொரு காலத்தில் ஏமாற்றியது போன்று இப்போதும் ஏமாற்றலாம் எனத் தமிழ்க் கட்சிகள் நினைக்குமானால் அதனைப் போன்றதொரு முட்டாள்தனம் வேறெதுவுமாக இருக்க முடியாது.
அடுத்து இத்தேர்தலில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டினை ஆராய்ந்து பார் த்தால் அக்கட்சிகளும் பெரும்பாலான இடங்களில் அரசாங்கத்துடனேயே இணைந்து போட் டியிடுகின்றன. அதனால் முஸ்லிம் மக்களின் ஆதரவும் நிச்சயம் அரசாங்கத்திற்கு உள் ளதை உறுதி செய்து கொள்ள முடியும். சில இடங்களில் அரசில் அங்கம் வகிக்கும் கட்சி கள் தனித்தனியே போட்டியிட்டாலும் முஸ்லிம் மக்களின் முதலாவது தெரிவு ஆளுங் கட்சியை நோக்கியதாகவே உள்ளது.
அரசில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் தமது பலத்தைத் தத்தமது பிரதேசங்களிலுள்ள மக்க ளுக்குக் காட்டுவதற்காக ஆங்காங்கே தமக்கிடையே பலப்பரீட்சையையும் நடத்தி வருகி ன்றன. எனினும் இறுதியில் அவற்றின் ஆதரவு ஆளுங்கட்சிக்காகவே உள்ளது. அத னால் இந்தப் பலப்பரீட்சை அவசியமற்றதொன்றாகவே உள்ளது. மக்களுக்குத் தமது நிலை ப்பாட்டினைத் தெளிவாக விளக்கி ஒற்றுமையாக விட்டுக் கொடுப்புடன் சகோதரக் கட்சி கள் இணைந்து செயற்பட்டால் மக்கள் இருதரப்பினரையும் நிச்சயம் வரவேற்பர்.
இத்தகைய பிரிந்து சென்று ஆதரவளிக்கும் நிலையை இக்கட்சிகள் மாற்றியமைத்திருக்கலாம். ஆனால் தமது பலம் தம்மை ஆதரிக்கும் மக்களுக்குத் தெரிய வேண்டும் எனும் எண் ணம் இக்கட்சிகளின் தலைவர்களிடையே காணப்படுகிறது. ஏனெனில் இது குட்டித் தேர்த லாக இருந்தாலும் பிரதேச மட்டத்தில் தமது பகுதிகளை ஆளும் உரிமையை இத்தேர்தல் ஏற்படுத்திக் கொடுக்கின்றது. அத்துடன் எதிர்காலங்களில் நடைபெறும் பாராளுமன்ற, மாகாண சபைத் தேர்தல்களுக்கும் இதுவொரு தயார்படுத்தும் தேர்தலாகவும் உள்ளது என்பதனால்தான் இக்குட்டித் தேர்தலிலேயே இத்தனை கலாட்டாக்கள் நடைபெறுகின்றன.
இதேபோன்று மலையகத்தில் நடைபெறும் ஓரிரு உள்ளூராட்சி சபைகளில் வழமைபோன்றே இம் முறையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆளுங்கட்சியுடன் இணைந்து போட்டியிடு கின்றது. அதனால் பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பின்னால் அணிதிரண்டு நிற்பர் என்பதில் ஐயமில்லை. மலையக மக்களுக்காக அரசாங்கத்தினூடாக அமைச்சர் தொண்டமான் அனைத்தையும் செய்து வருகின்றார்.
எனவே நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் சிந் தித்துச் செயற்பட்டுத் தமது வாக்குகளை வழங்க வேண்டும். வெறுமனே எதிர்க்கட்சியிலி ருந்து கொட்டாவி விடும் அரசியல்வாதிகளால் எதனையும் செய்ய முடியாது. அதிகாரம் உள்ள கட்சிகளையும் அதன் ஆளுமை கொண்ட வேட்பாளர்களையும் ஆதரித்து எமது தேவைகளை நாமே வென்றெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment