Tuesday, September 20, 2011

கிரீஸ் வங்கி முன்பாக தீக்குளித்த நபரால் பரபரப்பு!

Tuesday, September 20, 2011
வட கிரீஸில் அரசாங்கம், வங்கிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 55 வயது நபரொருவர் தனக்குத் தானே பெற்றோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

தெஸ்ஸாலோனிகி எனும் இடத்திலுள்ள வங்கியொன்றின் கிளைக்கு வெளியே தீக்குளித்த மேற்படி நபரின் உடலில் பரவிய தீயை அங்கிருந்த பொலிஸார் துரிதமாக செயற்பட்டு அணைத்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மார்புப் பகுதியில் கடும் எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அந் நபர் காணப்படுகிறார்.

நிதிப் பிரச்சினை காரணமாக மேற்படி நபர் ஏற்கனவே இரு வருடங்களுக்கு முன் தனக்குத் தானே தீ வைத்துக் கொள்ள முயற்சித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment