Tuesday, September 20, 2011
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவின் பதவிகளை நீக்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெறவிருந்த நிலையில் அந்த நடவடிக்கை அடுத்த மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் நீதியரசர்கள் குழாமின் அங்கத்தவரான டபிள்யு.எல். ரஞ்சித் சில்வா தவிர்க்கமுடியாத காரணத்தினால் வருகை தராததால் இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை சரத் பொன்சேக்கா கைதுசெய்யப்பட்ட போது அவரை விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
அந்த மனு விசாரணையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவின் பதவிகளை நீக்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெறவிருந்த நிலையில் அந்த நடவடிக்கை அடுத்த மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் நீதியரசர்கள் குழாமின் அங்கத்தவரான டபிள்யு.எல். ரஞ்சித் சில்வா தவிர்க்கமுடியாத காரணத்தினால் வருகை தராததால் இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை சரத் பொன்சேக்கா கைதுசெய்யப்பட்ட போது அவரை விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
அந்த மனு விசாரணையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment