Saturday, September 17, 2011

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நால்வர் கைது!

Saturday, September 17, 2011
தம்புத்தேகம பிரதேசத்தில் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்களால் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதற்கு ஒத்தாசை வழங்கியதாக கூறப்படும் ஒருவரும் கைதானவர்களில் அடங்குவதாக அதிகார சபையின் தலைவர் குறிப்பிடுகிறார்.

சந்தேகநபர்களை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமி நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஐந்து பேரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment