Saturday, September 17, 2011

இலங்கை வந்தார் முரளி மனோஹர் ஜோசி!

Saturday, September 17, 2011
ஸ்ரீமத் அநாகரிக்க தர்மபாலவின் 147வது ஜனன தின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய பாரதிய ஜனதா கட்சியின், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி முரளி மனோஹர் ஜோசி இலங்கைக்கு வருகைத் தந்துளள்ளார்.

இந்திய மக்கள் கணக்காய்வாளர் குழுவின் தலைவரான ஜோசி சிரேஷ்ட அரசியல் தலைவர்களுல் ஒருவராவார்.

இலங்கையின் தேசிய தலைவர்களுல் ஒருவரான ஸ்ரீமத் அநாகரிக்க தர்மபாலவின் 147வது ஜனன தினவைவத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை மகாபோதி சங்கத்தின் அழைப்பிற்கு அமைய தான் இலங்கை வந்துள்ளதாக ஜோசி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீமத் அனாகரிக்க தர்மபால பௌத்த மதத்தை இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் பரப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் என்றும் அதனால் இந்நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு தான் பெருமையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment