Saturday, September 17, 2011

நடிகை சோனா பாலியல் புகார்: எஸ்.பி.பி.சரணிடம் போலீஸ் விசாரணை!

Saturday, September 17, 2011
தயாரிப்பாளரும், நடிகருமான எஸ்.பி.பி.சரண் மீது நடிகை சோனா பாண்டி பஜார் போலீசில் பாலியல் புகார் அளித்தார். மது விருந்தில் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் இரவு தன்னோடு தங்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் எஸ்.பி.பி.சரண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருந்து நிகழ்ச்சியை நடிகர் வைபவ் ஏற்பாடு செய்து இருந்தார். தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் நடந்தது. வைபவ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சோனா, எஸ்.பி.பி.சரண் போன்றோர் நெருங்கிய நண்பர்கள். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு எஸ்.பி.பி. சரண் மீது இன்று அல்லது நாளை விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதில் வெங்கட் பிரபு முக்கிய சாட்சியாக கருதப்படுகிறார். சம்பவம் அனைத்தும் வெங்கட் பிரபுவுக்கு தெரியும் என்றும் தனக்காக எஸ்.பி.பி. சரணிடம் வெங்கட்பிரபு சண்டை போட்டார் என்றும் சோனா கூறினார்.

இருவரும் நண்பர்கள் என்பதால் வெங்கட்பிரபு யார் பக்கம் சேருவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட விருந்தில் பங்கேற்ற அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சோனா, எஸ்.பி.பி.சரண் தகராறு நடந்தபோது சோனாவின் பெண் உதவியாளரும், டிரைவரும் அருகில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களையும் போலீசார் விசாரிக்க உள்ளனர். இவ்வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க எஸ்.பி.பி.சரண் கோர்ட்டில் முன் ஜாமீன் பெறுவார் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment