Thursday, September 22, 2011நாட்டில் பொலிஸ் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி புரொக்டர் தெரிவித்தார்.
நாட்டின் சில பிரதேசங்களில் மீண்டும் பொலிஸ் பதிவுகள் இடம்பெற்று வருவதாக வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையுமில்லை என தெரிவித்த அவர் மக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.
பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவினைப் பலப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் நாட்டின் சில பிரதேசங்களில் பொலிஸ் பதிவுகள் இடம்பெற்றன. தற்போது புதிதாக எவ்வித பதிவுகளும் இடம்பெறவில்லை.
No comments:
Post a Comment