Thursday, September 15, 2011

யாழில் கல்வி நிலையத்துக்கு சென்ற மாணவியை காணவில்லை!

Thursday,September 15,2011
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை நாச்சிமார் கோயிலடியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த ஐந்து நாட்களாகக் காணாமல் போயுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி இதுவரை வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாணவியைக் கண்டு பிடிப்பதற்காக முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment