Friday, September 30, 2011

புலிகள் இயக்கத்தின் பிரதான சர்வதேச தளமாக நெதர்லாந்து-நெதர்லாந்து அரச தரப்பு தெரிவித்துள்ளது!

Friday, September 30, 2011
புலிகள் இயக்கத்தின் பலவந்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக நெதர்லாந்தில் உள்ள சுமார் ௯000. - 13000 வரையான தமிழ் மக்கள் புலிகளுடன் இணைந்து செயற்பட வேண்டிவந்ததாக நெதர்லாந்து அரச தரப்பு தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில் புலி இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள ஐவர் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நெதர்லாந்து அரச தரப்பு சட்டத்தரணி இவ்வாறு கூறியுள்ளார்.

வழக்கு தொடரப்பட்டுள்ள 5 பேருள் 52 வயதுடைய ராமச்சந்திரன் என்பவர் புலிகளின் சர்வதேச கணக்காளர் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் நிதி சேகரித்து புலிகளுக்கு ஆயுதம் கொள்வனவு செய்து கொடுத்ததாக நெதர்லாந்து அரச வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவருக்கு 16 வருட சிறை தண்டனை விதிக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஏனைய நால்வரில் 40 வயதுடைய ஸ்ரீரங்கம் என்பவர் நெதர்லாந்து புலிகள் இயக்கத்தின் தலைவர் எனக் கூறியுள்ள வழக்கறிஞர்கள் அவர் உள்பட நால்வருக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்குமாறும் கோரியுள்ளனர்.

புலிகளின் சர்வதேச வலையமைப்பு இயங்கும் பிரதான நாடாக நெதர்லாந்து காணப்படுவதாக அரச சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment