Friday, September 30, 2011

புலிகளுக்கு வால்பிடிக்கப் போய் இழந்தது போதாதா?:நாட்டுக்கு எதிரான கட்சிகளிடம் சோரம்போய்விட்டார் ரணில்-குணதாச அமரசேகர!

Friday, September 30, 2011
தருஸ்மன் அறிக்கையை சர்வதேசம் ஏற்றுவிட்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய். ரணிலின் கூற்றை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம். புலிகளுக்கு வால்பிடிக்கப் போய் இழந்தது போதாதா? இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக விமர்சித்துள்ளார்.நாட்டுக்கு எதிரான கட்சிகளிடம் சோரம்போய்விட்டார் எதிர்க்கட்சித் தலைவர். இனி அவர் உள்ளதையும் இழக்கப் போகின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேசத்தினால் சுமத்தப்பட்டுள்ள யுத்தக்குற்றங்கள் அடங்கலான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசு இந்த வருடத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் சர்வதேசத்தின் கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்படும்.

யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பான ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையை சர்வதேசம் ஏற்றுவிட்டது. நாடாளுமன்றத் தெரிவுக்குழு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு ஏற்றவகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி செயற்படும்.'' என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நேற்று முன்தினம் வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கூற்று தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

தருஸ்மன் தலைமையிலான குழுவைத் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்தார்.

அந்தக் குழுவின் அறிக்கை ஐ.நா. அறிக்கை அல்ல என்பதை நாம் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாகக் கூறி வருகின்றோம்.

அரசும் அந்த அறிக்கையை நிராகரித்துவிட்டது. ஏன்? அறிக்கைக்கு சொந்தக்காரரான பான் கீ மூனே அறிக்கையை சர்வதேசம் ஏற்றுவிட்டது எனக் கூறவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் ரணில் விக்கிரமசிங்க இந்த விவகாரத்தில் முண்டியடிப்பதன் நோக்கம் என்ன? அவர் யாரைத் திருப்திப்படுத்த முயற்சிக்கின்றார்?

நாட்டுக்கு எதிரான ஒரு கட்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அந்தக் கட்சியின் நிலைப்பாட்டைத் தாம் வரவேற்பதாக ரணில் கூறியுள்ளார்.

இதுவோர் அருமையான விடயம். மனப்பூர்வமாக நாம் வரவேற்கின்றோம்.

ஏனெனில், புலிகளுக்கு உதவப்போய் ரணில் விக்கிரமசிங்க இழந்தது ஏராளம். இப்பொழுது கூட்டமைப்புக்கு அதாவது, நாட்டுக்கு எதிரானவர்களுக்கு உதவப் போயுள்ளார்.

எனவே, உள்ளதையும் அவர் இழக்கப்போகின்றார் என்பது நிச்சயம். இதுவே எமக்கு வேண்டும். அதனால்தான், ரணிலின் கூற்றை வரவேற்பதாக நான் கூறினேன்.

எதிர்க்கட்சித் தலைவர், தருஸ்மன் அறிக்கையை சர்வதேசம் ஏற்றுவிட்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய். அவரின் கூற்றை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம் என்றார் அவர்.

No comments:

Post a Comment