Wednesday, September 21, 2011

யாழ்.கோப்பாய் பகுதியில் நேற்றிரவு பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது!

Wednesday, September 21, 2011
யாழ்.கோப்பாய் பகுதியில் நேற்றிரவு பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீட்டுரிமையாளரைக் கத்திமுனையில் அச்சுறுத்தி விட்டுச் சுமார் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. யாழ்.கோப்பாய் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு 8.30 மணியளவில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளரைக் கத்திமுனையில் அச்சுறுத்திய கொள்ளையர்கள் தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான இலத்திரனியல் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் எனப் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள கொப்பாய பொலிஸார் விசாரணைகள் தொடவதாகக் கூறினர்

No comments:

Post a Comment