Wednesday, September 21, 2011

பயணப் பொதியில் இருந்து சிசு மீட்பு!

Wednesday, September 21, 2011
அவிசாவளை பொதுச் சந்தைக்குப் பின்புறத்தில் உள்ள பற்றைக் காட்டில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நான்கு நாள் நிரம்பிய சிசுவொன்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

பயணப் பொதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிசு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் தற்போது சிசுவிற்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது.

இந்த சிசுவின் பெற்றோர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment