Wednesday, September 21, 2011

கிளின்டன் உலகளாவிய முனைப்பு ஏழாவது வருடாந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கலந்து கொண்டுள்ளார்!

Wednesday, September 21, 2011
கிளின்டன் உலகளாவிய முனைப்பு ஏழாவது வருடாந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கலந்து கொண்டுள்ளார்.

செப்டெம்பர் 20ம் திகதி செரட்டோன் நியூயோர்க விடுதியிலட ஆரம்பமாகியுள்ள குறித்த சந்திப்பு நாளை வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி 2006ம் ஆண்டு தொடக்கம் குறித்த சந்திப்பில் கலந்து கொள்வதோடு கிளின்டன் உலகளாவிய முனைப்பின் வறுமை ஒழிப்பு ஆலோசனைக் குழுவின் அங்கத்தவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தலைவர்கள் அரசியல், சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி குறித்து கிளின்டன் உலகளாவிய முனைப்பு சந்திப்பின் போது கலந்துரையாடுவது வழக்கம்.

No comments:

Post a Comment