Monday, September 12, 2011

ரொபட் ஒ பிளேக் இலங்கை வந்துள்ளார்!

Monday, September 12, 2011
தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் செயலாளர் ரொபர்ட் ஒ பிளக் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இன்று அதிகாலை கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பிளக் சென்றடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்றைய தினம் பிளக் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இன்றைய பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதேவேளை, அரசாங்க உயரதிகாரிகள், வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை பிளக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 29ம் திகதி திட்டமிடப்பட்டிருந்த ரொபேர்ட் ஓ பிளேக்கின் விஜயம் ஐரின் சூறாவளியை அடுத்து செப்டெம்பர் 12 திகதிக்கு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment