Friday, September 30, 2011

பயங்கரவாத தடைச் சட்ட விதிமுறையினை ஆட்சேபித்து மனுதாக்கல் - மாவை.எஸ்.சேனாதிராஜா!

Friday, September 30, 2011
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சரினால் அறிவிக்கப்பட்ட குறித்த விதிமுறைகளை ஆட்சேபித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.எஸ்.சேனாதிபதி ராஜா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மக்களின் நலனை கருத்திற் கொண்டு இந்த மனுவை தாக்கல் செய்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் 27 ஆம் சரத்தின் முதலாவது பிரிவிற்கமைய அந்த சட்டத்தை செயற்படுத்துவது தொடர்பாக சட்டத்தின் கொள்கைகளுக்கு அமைவான விதிமுறைகளை அமுல்படுத்துவதற்கான அதிகாரம் பாதுகாப்பு அமைச்சருக்கு உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த விதிமுறைகள் அரசியில் அமைப்பிற்கு அமைவானதாக இருக்க வேண்டும் என்பதுடன் நீதிமன்றத்தினால் ஆராயப்பட்டிருக்க வேண்டும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பின் பிரகாரம் மக்களுக்கு கிடைத்துள்ள சில உரிமைகள் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளால் மீறப்படுவதாக மனுதாரர் கூறியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள குறித்த விதிமுறைகள் காரணமாக அரசியல் அமைப்பு மீறப்படுவதாக உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment