Friday, September 16, 2011

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - கனடா!

Friday,September,16,2011
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தெடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி வலியுறுத்தியுள்ளார்.

சமதானத்தையும், அபிவிருத்தியை ஏற்படுத்த மெய்யாகவே அரசாங்கம் அக்கறை காட்டினால் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பான விவகாரத்தை உதாசீனம் செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் இலங்கை ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் 2013ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக கனேடிய பிரதமர் அறிவித்திருந்தார்.

யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் சர்வதேச சமூகம் வலியுறுத்தி வரும் சில விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக புருஸ் லெவி தெரிவித்துள்ளார்.

ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தி குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாவிட்டால் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் சிக்கல் நிலைமை உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறுவதற்கு இன்னமும் இரண்டு ஆண்டு கால அவகாசம் இருப்பதாகவும், குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதமர் வலியுறுத்தி வருவதாகவும் புருஸ் லெவி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment