Friday, September 30, 2011

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் - குற்றவாளிக்கு மரணதண்டனை!

Friday, September 30, 2011
19 வயது பாடசாலை மாணவியை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட ஒருவருக்கு மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி சிசிர குமார திஸாநாயக்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு மே 26 ஆம் திகதி மாணவியை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்ததாக பிரதிவாதிக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்நதது.

இதேவேளை அளவ்வ பகுதியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment