Monday, September 19, 2011

ரசிகர்கள் தொல்லை : ஐஸ்வர்யா ராய் வேதனை!!!

Monday, September 19, 2011
ரசிகர்கள் தொல்லையால் நிம்மதியாக சாமி கூட கும்பிட முடியவில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராய் வேதனைப்பட்டுள்ளார். முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், கர்ப்பமான பின் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுப்பதற்காக டாக்டர்களை சந்திப்பது, அவர்கள் ஆலோசனைப்படி உணவு எடுத்துக் கொள்வது, லேசான உடற்பயிற்சிகள் செய்வது என்று அவர் பொழுது கழிகிறது.

இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முக்கியஸ்தர்கள் விரும்பி அழைத்ததால் சென்றார். அங்கு அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்து விட்டார்களாம். கூட்டத்துக்குள் சிக்கித் தவித்த ஐஸ்வர்யா ராயை, போலீசார் தலையிட்டு மீட்டனர். இதனால் திருப்தியாக சாமி கும்பிட முடியாமல் கோபத்தோடு வீடு திரும்பினார்.

இது குறித்து ஐஸ்வர்யாராய் அளித்துள்ள பேட்டியில், "ரசிகர்கள் செய்வதை பார்த்து சந்தோஷப்படுவதா அல்லது வேதனைப்படுவதா என்றே புரியவில்லை. நானும் சாதாரண பெண்தான். நடிகை என்பதால் சொந்த வாழ்க்கை இருக்கக்கூடாது என்று அர்த்தம் அல்ல. வீடு, பெற்றோர், உறவினர்கள் எல்லாம் உண்டு. இதுபோன்று ரசிகர்கள் தொல்லை கொடுப்பதால், நிம்மதியாக சாமி கும்பிடக் கூட முடியவில்லை," என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment