Tuesday, September 13, 2011

சோனியா ராஜீவ் கொலையாளிகளை மன்னித்தால் அது அவரது சொந்த விருப்பமாக இருக்கலாம் ஆனால் அது காங்கிரஸ் கட்சியின் விருப்பமாக இருக்க முடியாது-இளங்கோவன்!

Tuesday, September 13, 2011
ஈவிகேஎஸ். இளங்கோவன் ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவருக்கும் நிறைவேற்ற கூடாது என்று சொல்லும் கருணாநிதி அது பற்றி என்னோடு ஒரே மேடையில் விவாதிக்க தயாரா..?

அவரோடு” விவாதம் செய்யும் அளவுக்கு “நான்” தகுதியில்லாத நபர் என்று அவர் நினைத்தால் அவரது மகன்களோடு நான் ஒரே மேடையில் விவாதிக்கிறேன்.

சோனியா காந்தியின் தயவால் எம்.பி.யான மணிசங்கரஐயர் ராஜீவ் கொலையாளிகளுக்கு “தூக்கு” தண்டனை தரக்கூடாது என்கிறார்.

அவர் தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், செய்யா விட்டால் அவரை காங்கிரஸ் தொண்டர்கள் தமிழகத்தில் நுழைய விடமாட்டார்கள்.

சோனியா, ராஜீவ் கொலையாளிகளை மன்னித்தால் அது அவரது சொந்த விருப்பமாக இருக்கலாம். ஆனால் அது காங்கிரஸ் கட்சியின் விருப்பமாக இருக்க முடியாது’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும்,தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்பது கட்சியினரின் விருப்பம்’’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment