Friday, September 16, 2011

ஒரே இரவில் அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்க முடியாது – லக்ஸ்மன் யாபா!

Friday, September 16, 2011
SL:ஒரே இரவில் அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்க முடியாது என பதில் ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு பொருத்தமான ஓர் தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியாயமான அதிகாரப் பகிர்வின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புலிகளுடனான யுத்தத்தை முடிவுறுத்துவதற்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும், எஞ்சியுள்ள பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வு காணப்பட வேண்டுமென கோருவது நியாயமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டு;ள்ளார்.

யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர் ஓ பிளக் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment