Monday, September 12, 2011

குடியேற்றவாசிகள் தொடர்பான விசாரணை - குற்றப்புலனாய்வினரிடம்!

Monday, September 12, 2011
கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இலங்கையின் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு படகொன்றில் சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் பொலிஸ் அத்தியட்சகர் பிசாந்த ஜயகொடி தெரிவிக்கிறார்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த குழுவில் 44 பேர் உள்ளடங்குகின்றனர். இதில் ஒரு பெண்ணும் இரண்டு சிறுவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment