Monday, September 19, 2011

நாடு திரும்புவதற்கும் யுத்தக் குற்றச் செயல் குற்றச சாட்டுக்களுக்கும் தொடர்பில்லை – ஜகத் டயஸ்!

Monday, September 19, 2011
நாடு திரும்புவதற்கும் யுத்தக் குற்றச் செயல் குற்றச் சாட்டுக்களுக்கும் தொடர்பு கிடையாது என ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்திற்கான பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே வதந்திகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 57ம் படையணி மேற்கொண்ட யுத்தக் குற்றச் செயல்களுக்கு அதன் கட்டளைத் தளபதி ஜகத் டயஸ் பொறுப்பேற்க வேண்டுமென சில மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

பதவிக் காலம் முடிவடைவதனால் தாம் நாடு திரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட காரணத்தினால் நாடு திரும்புவதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல் விவகாரங்கள் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்க அதிகாரிகள் தம்மிடம் எவ்வித கேள்வியும் எழுப்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சுவிட்சர்லாந்தின் பெர்மன் என்னும் நகரில் தமக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

புலிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பிரதித் தூதுவர் பதவி வழங்கப்படவில்லை எனவும், இராஜதந்திர கடமைகளை ஆற்றுவதற்காகவே இந்தப் பதவி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த இராணுவத் தளபதியாகக் கூட பதவி வகிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜகத் டயஸை பிரதித் தூதுவராக ஏற்றுக் கொள்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment