Monday, September 19, 2011

மட்டக்களப்பில் TNA மற்றும் UNP கட்சிகளின் ஆதரவாளர்கள் 500பேர் SLFP யில் இணைவு!

Monday, September 19, 2011
நீண்டகாலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளின் ஆதரவாளர்களாக செயற்பட்ட 500 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். நேற்றுக்காலை மட்டக்களபப்பு கல்குடா தேர்தல் தொகுதியிலுள்ள வேம்பு கிராமத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்தர கட்சியின் கல்குடா தொகுதி பிரதம அமைப்பாளர் கலாநிதி டி.எம்.சந்திரபால முன்னிலையில் இவர்கள் கட்சியின் அங்கத்துவ அட்டைகளைப்பெற்று உத்தியேகபூர்வமாக கட்சியில் இணைந்தனர்.

வேம்பு பல்தேவைக் கட்டிடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வித்திணைக்கள அதிகாரி கே.சண்முகம் மகிழவெட்டுவான் வித்தியாலய அதிபர் எம்.லீலாதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் கையெழுத்துடனான அங்கத்துவ அட்டைகள் கட்சியல் புதிதாக இணைந்தவர்களுக்கு வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment