Monday, September 19, 2011
முல்லைத்தீவு, நந்திக்கடல் களப்பில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒரு சிறுவன் காயமடைந்துள்ளான் எனத் தெரிய வருகிறது.காயமடைந்த சிறுவன் உடனடியாகவே வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளான் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட சிறுவன் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் கைக்குண்டொன்று அகப்பட்டு வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றுக் காலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
முல்லைத்தீவு, நந்திக்கடல் களப்பில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒரு சிறுவன் காயமடைந்துள்ளான் எனத் தெரிய வருகிறது.காயமடைந்த சிறுவன் உடனடியாகவே வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளான் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட சிறுவன் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் கைக்குண்டொன்று அகப்பட்டு வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றுக் காலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment