Saturday, September 24, 2011

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவு பாராட்டுக்குரியது என அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்-திசர சமரசிங்க!

Saturday, September 24, 2011
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவு பாராட்டுக்குரியது என அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொதுநலவாய அமைப்பு உறுப்புரிமையை இடைநிறுத்த வேண்டுமென அவுஸ்திரேலிய கிறீன் கட்சி முன்வைத்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் மூலம் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கிறீன் கட்சியினர் எவ்வித அடிப்படையுமின்றி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புக்கு முன்னுரிமை அளித்து சரியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment