Sunday, September 18, 2011

ஜி.எல்.பீரிஸ் நியுயோர்க் பயணம்:-சிறுவர் துஷ்பிரயோகத்தை ஆராய சிவில் பாதுகாப்புக் குழுக்கள்!

Sunday, September 18, 2011
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியுயோர்க் பயணமாகியுள்ளார்.

எதிர்வரும் 28ஆம் திகதி வரை இக்கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. அரச தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர் துஷ்பிரயோகத்தை ஆராய சிவில் பாதுகாப்புக் குழுக்கள்!

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை ஆராய்ந்து பார்ப்பதற்காக சிவில் பாதுகாப்புக் குழுக்களின் ஒத்துழைப்பபைப் பெற்றுக்கொள்ள சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாளாந்தம் பதிவாகின்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பங்கள் குறித்து நேற்று மாலை அமைச்சில் விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றதாக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவிக்கிறார்.

சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் ஊடாக உரிய தகவல்கள் பெற்றுக் கொண்டதும் நடைமுறைப்படுத்தும் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படும் பட்சத்தில் அதுகுறித்து அதிகபட்ச சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment