Saturday, September 17, 2011

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐ.நா. சமாதானப் படையில்!

Saturday, September 17, 2011
பொலிஸ் ஊடகப் பேச்சாளராகப் பதவி வகித்த பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜெயகொடி தனக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இரண்டு வருடங்கள் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகப் பதவி வகித்த அவர் ஐ.நா. சமாதானப் படையில் பணியாற்றுவதற்காக வெளிநாடு செல்கிறார்.பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லும் பிரிசாந்த ஜெயகொடி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எனது பணியை சரியாக நிறைவேற்றியுள்ளேன் என்று நம்புகிறேன். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பணியை சிறப்பாக மேற்கொள்ள உதவிய சகல ஊடக நிறுவனங்கள், பொலிஸ் மாஅதிபர் அடங்கலான பொலிஸ் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். நாட்டுக்காக மேற்கொள்ள வேண்டிய சேவையை நிறைவேற்ற பின்நிற்க மாட்டேன் என்றார்.

No comments:

Post a Comment