Saturday, September 17, 2011
ஐ. நா. நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் இலங்கைமீது யுத்தக்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் வகையில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வட்டமேசை மாநாடொன்றை எதிர்வரும் 20ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணையை வலியுறுத்துவதற்கு ஆதரவளிக்கும் நாடுகள் தொடர்பான விவரங்கள் மாநாட்டில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் ஐ.நா அமைப்பின் இலங்கைக்கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ், சர்வதேச ஜூரிகள் சபையின் தலைவர் ஜோன் டோவ்ட், நியூ சௌத் வெல்சின் முன்னாள் சட்டமா அதிபர் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.
ஐ. நா. நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் இலங்கைமீது யுத்தக்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் வகையில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வட்டமேசை மாநாடொன்றை எதிர்வரும் 20ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணையை வலியுறுத்துவதற்கு ஆதரவளிக்கும் நாடுகள் தொடர்பான விவரங்கள் மாநாட்டில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் ஐ.நா அமைப்பின் இலங்கைக்கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ், சர்வதேச ஜூரிகள் சபையின் தலைவர் ஜோன் டோவ்ட், நியூ சௌத் வெல்சின் முன்னாள் சட்டமா அதிபர் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.
No comments:
Post a Comment