Friday, September 02, 2011
2012ம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவுகளுக்காக 223 பில்லியன் ரூபா ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதமளவில் வரவு செலவுத் திட்ட யோசனை நிதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாதுகாப்பு செலவுகளுக்காக கடந்த ஆண்டில் 210 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அந்தத் தொகை மேலும் 13 பில்லியன்களினால் உயர்த்தப்பட்டுள்ளது.
முதலீட்டு செலவுகளுக்காக 6000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வடக்கு கிழக்கு இராணுவ, கடற்படை, விமானப்படை முகாம்கள் மற்றும் காவல்துறை நிலையங்களை அமைப்பதற்காகவும், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம செய்வதற்காகவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
No comments:
Post a Comment