Wednesday, August 31, 2011

புலிச் சந்தேச நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தாகள் விடுதலை!

Wednesday,August,31,2011
புலிச் சந்தேச நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தாகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஒருவரும் நான்கு காவல்துறை உத்தியோகத்தர்களும் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை விடுதலை அறிக்கைகளை மோசடியான முறையில் பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பாபா மாஹில் டோல், எம்.எஸ்.எம். அஸ்லம், ஜெய்னுதீன் கமால்தீன், ஏ.விக்ரமசிங்க மற்றும் எம்.எப். புஸ்பகுமாரன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனா.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய கொழும்பு நீதவான் லங்கா ஜயரட்ன சந்தேக நபர்களை விடுதலை செய்துள்ளார்.

No comments:

Post a Comment