Wednesday, August 31, 2011

தமிழக சட்டசபையில் ராஜிவ் கொலையாளிகள் குறித்து இயற்றப்பட்டுள்ள தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது-மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்!

Wednesday,August,31,2011
தமிழக சட்டசபையில் ராஜிவ் கொலையாளிகள் குறித்து இயற்றப்பட்டுள்ள தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது-மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்!

புதுடில்லி : தமிழக சட்டசபையில் ராஜிவ் கொலையாளிகள் குறித்து இயற்றப்பட்டுள்ள தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:ராஜிவ் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள தீர்மானம், யாரையும் கட்டுப்படுத்தாது. சென்னை ஐகோர்ட், ராஜிவ் கொலையாளிகளுக்கான தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

ஐகோர்ட் முடிவில், நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஐகோர்ட் இடைக்கால தடை தான் விதித்துள்ளது. ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கும் வரை, நாங்கள் பதில் ஏதும் கூற விரும்பவில்லை.எனினும், ராஜிவ் கொலையாளிகள் விஷயத்தில் ஜனாதிபதியின் முடிவை தான், நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். தமிழக சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள தீர்மானம் மற்றும் ஐகோர்ட்டின் இடைக்கால தீர்ப்பு குறித்து, மத்திய அரசு தனது தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.

ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி குறிப்பிடுகையில், "சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, பிரதமர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வேண்டும். சென்னை ஐகோர்ட் தீர்ப்பில் எனக்கு உடன்பாடில்லை. பயங்கரவாதிகள் விஷயத்தில் கருணை காட்டக் கூடாது.இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.

No comments:

Post a Comment