Tuesday, August 30, 2011

அமெரிக்கா:இங்கிலாந்து:இந்தியாவின் நெருக்குதலால் தான் எனது சகோதரர் மகிந்த ராஜபக்ச அவசரகாலச் சட்டத்தை எடுத்தார் என்று சொல்வது தவறு.கோத்தபாய ராஜபக்ச!

Tuesday, August 30, 2011
அமெரிக்கா:இங்கிலாந்து:மற்றும் இந்தியாவின் நெருக்குதலால் தான் எனது சகோதரர் மகிந்த ராஜபக்ச அவசரகாலச் சட்டத்தை எடுத்தார் என்று சொல்வது தவறு. அவர் யாருக்கும் பயப்படுபவரில்லை. அவர் எப்போதும் பயப்படப் போவதுமில்லை என்று கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

கடந்த வாரம் கிறீஸ் பூத விவகாரம் தொடர்பாக முஸ்லீம் சமூகத் தலைவர்களையும் முஸ்லீம் மதத் தலைவர்களையும் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச,

அதேபோல அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக அரசாங்கமே கிறீஸ் பூதம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது என்ற புரளியும் நாட்டில் பரவியுள்ளது.

ஆனால் உண்மை என்னவென்றால் எங்களுடைய அரசாங்கத்திற்கு அப்படிச் செய்ய வேண்டிய தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நாட்டுக் நண்மை பயக்க என்ன செய்ய வேண்டும் என்பது எனது சகோதரினிற்குத் தெரியும் அதனால் தான் அவர் பாராளுமன்றத்தின் உதவியுடன் அவசரகாலச் சட்டத்திற்கு முடிவு கட்டியுள்ளார் எனத் தெரிவித்த கோத்தபாயவிடம்,

படைகளும் அரசும் கிறீஸ் பூத விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியை வெளியிட்ட மேற்படி முஸ்லீம் தலைவர்கள் கிறீஸ் பூத விவகாரத்தில் 25வீதம் உண்மையாக சம்பவங்கள் இடம்பெற அதையொட்டிய வதந்தி 75 வீதமாக இருக்கிறதென்றும் எனினும் அந்த 25வீத உண்மைச் சம்பங்களும் ஆராயப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

No comments:

Post a Comment